1419.‘யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?

     ‘(ஒருவன்)  யாரொடும் -  யார் ஒருவரோடும்;  பகை கொள்ளலன்
என்றபின் -
மாறுபாடு கொள்வதிலன் என்றால்;  (அவனுக்குப்) போர்
ஒடுங்கும் -
சண்டை இல்லாமற்போகும்;  புகழ் ஒடுங்காது - புகழ்
குன்றாது  நிறையும்;  தன் - அவனுடைய;  தார்- படை;  ஒடுங்கல்
செல்லாது -
கெடாது;  அது தந்தபின் - அவ்வாறு படைகெடாது
வளருமாயின்; வேரொடும்  கெடல் - (அவனைப் பகைக்கும் பகை)
அடியோடு அழிதலை;  வேண்டல்உண்டாகுமோ? - மட வேண்டிப்
பெருதல் உண்டாகுமோ’ (வேண்டாம் தானே நடக்கும்.)

      யாரொடும் பகைகொள்ளாமல்  இருந்தால்  புகழ் பெருகும்;  படை
அழியாது வளரும்.  எனவேஅவனைப் பகைக்கப் பிறர் நினைக்கினும் அது
செய்யார்; அதனால், பகையே இல்லாது ஒழியும்.  தார்என்பது முன்னணிப்
படையைக் குறிக்கும். இங்குப் பொதுவாகப் படை என்னும் கருத்தில்
வந்துள்ளது. எல்லாரிடமும்  அன்பு  செய்தல் ஆக்கம் தரும் என்ற
கருத்தினை “பலத்தால்  வெல்லப் பட்டபகைவன் சமயம் வாய்த்தபோது
கேடு செய்வான்;  அன்பால் வெல்லப் பட்ட பகைவன் எப்போதும் கெடுதல்
செய்யான் ” ஒஎன்னும் புத்த பகவான் மொழியோடு  இணைத்துப்
பார்க்கலாம். “ஊருடன் பகைக்கின்வேருடன் கெடும்”  என்னும் (கொன்றை.
6.) கருத்தையும் இங்குக் கருதுக.                                  21