1426.“ஒர்வின் நல் வினை ஊற்றத்தினார் உரை
போர் இல் தொல் விதி பெற்று உளது” என்று அரோ,
தீர்வு இல் அன்பு செலுத்தலின், செவ்வியோர்
ஆர்வம் மன்னவற்கு ஆயுதம் ஆவதே.

     ‘ஓர்வின் - ஆய்வினை உடைய;  நல்வினை ஊற்றத்தினார் - நல்ல
தொழிலின்கண் எப்பொழுதும் முயலும் முயற்சியை உடைய முனிவர்களது;
உரை - மொழியை;  பேர்வுஇல் தொல்விதி- மாறு படுதல் இல்லாத
பழைய விதி; பெற்று உளது - அடைந்து (அவ்வுரைவழி)  நடக்கின்றது;
என்று - என்று கருதி;  தீர்வுஇல் அன்பு  செலுத்தலின் - அவர்களிடத்து
நீங்காதஅன்பைச் செலுத்துகின்ற காரணத்தால்;  செல்வியோர் ஆர்வம் -
நன்மையுடைய அப்பெரியோர்தம்பால் செலுத்தும் விருப்பம்; மன்னவற்கு -
அரசனுக்கு;  ஆயுதம் ஆவது - படைக்கலம்ஆகும்.’

     முன்னர் (1416) ‘அவர் ஏவ நிற்கும் விதி’  என்றதும் காண்க.
முனிவர்க்கு  ஊழும்  கட்டுப்பட்டு நடக்கும். அதனால் அவர்களது
பிரியத்தைக் சம்பாதித்துக்கொள்ளுதல்  மன்னவற்குப் பெரும்படையாகும்.
‘அன்பீனும் ஆர்வம் உடைமை அதுவீனும், நண்பு என்னும் நாடாச் சிறப்பு”
என்ற குறளைப்(குறள் - 74) பின்னிரண்டு  வரிகளுடன் ஒப்பிடுக. ‘அரோ’
‘ஏ’ ஈற்றசை.                                                  28