1437.முதிர் ஒளி உயிர்த்தன, முடுகிக் காலையில்
கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என -
மதி தொட நிவந்து உயர் மகர தோரணம்
புதியன அலர்ந்தன புதவ ராசியே.

     புதவ ராசி - கோபுர வாயிற் கதவுகளின் வரிசைத் தொகுதிகள்;
காலையில் கதிரவன்- காலைப்பொழுதில் உள்ள இளஞ்சூரியன்; முடுகி -
விரைந்து சென்று (நண்பகலில்); வேறுஒரு கவின் கொண்டான் -
வேறுபட்ட ஒர் அழகைக் கொண்டனன்;  என - என்றுசொல்லும்படி; மதி
தொட நிவந்து உயர் மகர தோரணம் -
சந்திரனைத் தொடும்படி உயர்ந்த
மகரமீன் வடிவமாகச் செய்யப்பெற்ற தோரணங்கள்; முதிர்ஒளி உயிர்த்தன-
மிக்கசோபையை வீசினவாய்; புதியன - புதியனவாய்; அலர்ந்தன -
விளங்கப்பெற்றன.

     கோபுர வாயிற் கதவுகளில் மகரதோரணங்கள் புதியனவாய்க் கட்டப்
பெற்றமையை வருணித்தார்.புதவம் - கதவு. புதா என்பது புதவு என ஆகி
புதவம் என அம் சாரியை பெற்றது. “குறியதன் கீழ் ஆக்குறுகலும்
அதனோடு உகரம் ஏற்றலும்”  (நன். 172........) என்பது இலக்கணவிதி செஞ்
சூரியனாகியஉதய சூரியன் நண்பகலில் வெள்ளொலி விரித்தல் வெளிப்படை.
‘ஏ’காரம் ஈற்றசை.                                              39