1480.‘காதல் உன் பெருங் கணவனை அஞ்சி,
     அக் கனி வாய்ச்
சீதை தந்தை, உன் தாதையைத்
     தெறுகிலன்; இராமன்
மாதுலன் அவன்; நுந்தைக்கு
     வாழ்வு இனி உண்டோ?
பேதை! உன்துணை யார் உளர்
     பழிபடப் பிறந்தார்?

     ‘பேதை! - அறிவில்லாதவளே!; காதல் உன் பெருங்கணவனை
அஞ்சி
- உன்மேல்அளவிறந்த அன்புடைய உன் உயரிய நாயகனான
தயரதனுக்குப் பயந்து; அக்கனி வாய்ச் சீதை தந்தை- அந்தக் கொவ்வைக்
கனிபோலச்சிவந்த வாயையுடைய சீதையின் தந்தையாகிய சனகன்;  உன்
தாதையைத் தெறுகிலன் -
உன்னுடையதந்தையாகிய கேகய ராசன் மீது
படையெடுத்து அழித்திலன்;  அவன் இராமன் மாதுலன் - அந்தசனகன்
இராமனுக்கு மாமன்;  நுந்தைக்கு இனி வாழ்வு உண்டோ!? - (இராமன்
சக்கரவத்தியானால்சனகன் கை ஓங்கிவிடும்) உன் தந்தையாகிய கேகயனுக்கு
இனி வாழ்வு உண்டா? (அழிவுதான்); உன்துணை- உன்னளவுக்கு; பழிபடப்
பிறந்தார் யார் உளர்? -
பழி உண்டாகும் படி பிறந்தவர்கள்யார்
இருக்கின்றார்கள்’ (ஒருவரும் இல்லை).

     புகழ் இல்லாமற் போனாலும் போகட்டும் என்றால், பழியல்லவா
உண்டாகும் போல் உள்ளதேஎன்றாள் கூனி, தசரதனுக்குக் கட்டுப்பட்டு
சனகன் சும்மா இருக்கிறான்; எதிர்காலத்தில் இராமன்அரசனானால் சனகன்
சும்மா இரான் என்றாள். சனகனுக்கும் கேகயனுக்கும் இயற்கையில் பகை
உண்டு என்பதும்இதனால் விளங்கும்.                             82