கூனியின் ஆணை   | 1486. | மாழை  ஒண் கணி உரைசெய,      கேட்ட மந்தரை, ‘என்  தோழி வல்லள்; என் துணை வல்லள்’      என்று, அடி தொழுதாள்;  ‘தாழும் மன் நிலை; என் உரை      தலைநிற்பின், உலகம்  ஏழும் ஏழும் உன் ஒரு மகற்கு      ஆக்குவென்’ என்றாள். |  
      மாழை ஒண் கணி - (பிளந்த) மாவடுவைப் போலும் ஒள்ளிய  கண்களையுடைய கைகேயி; உரைசெய - (இவ்வாறு) சொல்ல;  கேட்ட -   அதுகேட்ட;  மந்தரை - கூனி;  ‘என் தோழி வல்லள் - என் தோழி  வல்லமையுடையவள்;  என் துணை வல்லள்’ -  என்உதவியாய தலைவி  திறமைக்காரியே;  என்று - எனச் சொல்லி;  அடி தொழுதாள் - கைகேயி  காலில் வணங்கினாள்; (பிறகு) ‘மன் நிலை தாழும் - அரசனாகிய தயரதன்  கொண்டுள்ள முடிவுதாழ்ச்சியடையும்;  என் உரைதலை நிற்பின் - என்  சொல்லை (நீ) உன்னுடைய தலைமேற்கொண்டுநிற்பதனால்;  உன் ஒரு  மகற்கு - உன்னுடைய ஒப்பற்ற மகனாகிய பரதனுக்கு;  உலகம்ஏழும்  ஏழும் ஆக்குவேன்’ - பதினான்கு உலகங்களையும்   உரிமையாகச்   செய்வேன்;’  என்றாள்- என்று சொன்னாள்.      தன் கருத்துக்குக் கைகேயி உடன்பட்டமைபற்றிப் பாராட்டினாள்.  பிறகு தயரதனைக் கண்டோவேறு காரணத்தாலோ மனம் மாறிவிடக் கூடாது  என்பதற்காக, ‘என் உரை தலை நிற்பின்’  என்றுஆணையிட்டாள். மனம்  மாறாத பொழுது கெஞ்சுவதும், மனம் மாறித் தன் வசம் ஆனபோது  விஞ்சுவதும் இத்தகைய சூழ்ச்சியாளர் இயல்பேயாம். முழுமையாகக்  கைகேயியைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துமேற் கூறுகின்றாள். 88  |