கூனியைக் கைகேயி மகிழ்ந்து பாராட்டுதல் 1489. | உரைத்த கூனியை உவந்தனள், உயிர் உறத் தழுவி, நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி, ‘இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய்; தரைக்கு நாயகன் தாய் இனி நீ’ எனத் தணியா. |
உரைத்தகூனியை - (இவ்வுபாயம்) சொன்ன மந்தரையை; (கைகேயி) உவந்தனள் -மகிழ்ந்து; உயிர்உறத் தழுவி - இறுகத் தழுவிக் கொண்டு; மாமணி நிரைத்த ஆரமும்நிதியமும் நீட்டி -சிறந்த மணிக்கற்கள் வரிசையாக வைத்துச் செய்யப் பெற்ற மாலையும்,ஏனைய செல்வங்களும் அளித்து; ‘என் ஒரு மகற்கு - என் ஒப்பற்றபுதல்வனுக்கு;இரைத்த வேலை சூழ் உலகம் - ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகத்தை; ஈந்தாய்- கொடுத்தாய்; (ஆதலால்) இனி நீ தரைக்கு நாயகன் தாய்’- இனிமேல்நீயே பூமிக்கரசனாகிய பரதனின் தாய் ஆவாய்;’ என- என்று; தணியா - தாழ்ந்துபாராட்டி; (தொடரும்). ‘பரதனுக்கு நான் பெற்ற தாய்; இன்று அரசை அவனுக்குப் பெற்றுத் தந்ததால் பரத அரசனுக்குநீயே தாய்’ என்று கூனியைப் பாராட்டினாள். தழுவி, நீட்டி தணியா என்ற வினையெச்சங்கள் அடுத்தபாட்டில் முடியும். தணிதல் - தாழ்தல். ‘தணியா’ என்பது ‘செய்யா’ என்னும் வாய்பாட்டில் வந்த வினையெச்சம். அது உடன்பாட்டுப் பொருளது. தணிந்து - தாழ்ந்து என்றாம். தன்னைத் தாழ்த்திக்கொண்டு தயால்லள் என்று சொல்லி, அவளைத் தாய் என்று உயர்த்திப் பாராட்டினாளாம். 91 |