தயரதன் கைகேயியின் மாளிகைக்கு வருதல் 1495. | நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை, யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில், ‘வாழிய’ என்று அயில் மன்னர் துன்ன, வந்தான் - ஆழி நெடுங் கை மடங்கள் ஆளி அன்னான். |
ஆழிநெடுங் கை - ஆணைச் சக்கரம் ஏந்தும் நீண்ட கைகளை யுடைய; ஆளி மடங்கள்அன்னான் - சிங்க ஏறுபோன்றவனான தயதன்; கங்குலின் நாழிகை நள் அடைந்த பின்றை -இராப்பொழுது நடுவை அடைந்த பின்னர்; வாழிய என்று அயில் மன்னர் துன்ன- ‘வாழ்க’ என்று கூறிக்கொண்டு வேலேந்திய அரசர்கள் பக்கத்தில் சூழ்ந்துவர; யாழ் இசை அஞ்சிய அம்சொல்ஏழை கோயில் - யாழினது ஒலியும் அஞ்சப்பெற்ற அழகிய மொழியையுடைய கைகேயியின் மாளிகைக்கு; வந்தான் - வந்தடைந்தான். மறுநாள் இராமனுக்கு முடிசூட்டுவதற்குரிய விழா எற்பாடுகளைச் செய்வதில் காலம் கழிந்தமையால்இரவில் காலந் தாழ்த்துக் கைகேயியின் இருப்பிடம் நோக்கி மகிழ்ச்சியோடு தயரதன் சென்றான். ஏழை - பெண்; பிறர் பேச்சைக் கேட்டு ஆராயாது நடத்தலின் அறிவில்லாதவள் என்னும் குறிப்பும் புலப்பட வைத்தார். மடங்கல் - பிடரிமயிர் மடங்கியிருக்கப் பெற்றது; காரணப் பெயர். 5 |