கைகேயியைத் தயரதன் எடுத்தலும், அவள் மண்ணில் வீழ்தலும்  

1497.அடைந்து , அவண் நோக்கி,
     ‘அரந்தை என்கொல் வந்து
தொடர்ந்தது?’ எனத் துயர்கொண்டு
     சோரும் நெஞ்சன்,
மடந்தையை, மானை எடுக்கும்
     ஆனையேபோல்,
தடங்கை கள் கொண்டு தழீஇ,
     எடுக்கலுற்றான்.

     அவண் அடைந்து - அங்குச் சென்று;  நோக்கி - கைகேயியின்
நிலையைக் கூர்ந்துபார்த்துத் (துணுக்கம் கொண்டு); அரந்தை என் கொல்
வந்து  தொடர்ந்தது  என -
துன்பம்யாது வந்து சேர்ந்தது  என்று
எண்ணி;  துயர்கொண்டு சோரும் நெஞ்சன் - வருத்தமடைந்து வாடும்
மனமுடையவனாய்; மானை எடுக்கும் ஆனையே போல் - பெண்மானைத்
துதிக்கையால் யானையைப்போல;  தடங்கைகள் கொண்டு - தன் பெரிய
கைகளால்;  மடந்தையைத் தழீஇ - அவளைக் கட்டித் தழுவி;  எடுக்கல்
உற்றான் -
தூக்கத் தொடங்கினான்.