1498.நின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி,
மின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள்.
ஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள் -
மன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள்.

     மன்றல் அருந் தொடை மன்னன் - மணங் கமழும் அரிய மலர்
மாலையைச் சூடியதயரதனுடைய; ஆவி அன்னாள் - உயிர் போன்ற
வளான கைகேயி;  நின்று - தன் நிலையில்மாறாது நின்று;  தொடர்ந்த -
தன்னைத் தழுவ நீண்ட;  நெடுங் கை தம்மை நீக்கி -(அரசனுடைய)
நீண்ட கைகளை விலக்கி;  மின் துவள்கின்றது  போல - மின்னற் கொடி
துவண்டுவீழ்தல் போல; மண்ணில் வீழ்ந்தாள் - தரையில் வீழ்ந்து;
ஒன்றும் இயம்பலள் -ஒன்றும் சொல்லாமல்; நீடு உயிர்க்கல் உற்றாள்-
பெருமூச்சு விடத் தொடங்கினாள்.

     தேவியர் மூவரில் கைகேயியை தயரதன் மிகவும் விழைந்தான் என்பது
‘மன்னன் ஆவி அன்னாள்’என்னும் தொடரால் விளங்குகிறது.  மன்னன்
துயர் கண்டும் அவள் நெஞ்றசு இளகாமல் இருந்தது தோன்ற‘நின்று’
என்றார்.  வீழ்ந்தாள்,  இயம்பலள் - முற்றெச்சங்கள்.                  8