கைகேயி வரம் வேண்டுதல்  

1500.வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை,
கொண்ட நெடுங் கணின் ஆலி கொங்கை கோப்ப,
‘உண்டு கொலாம் அருள் என்கண்? உன்கண் ஒக்கின்,
பண்டைய இன்று பரிந்து அளித்தி’ என்றாள்.

     வண்டு உளர்த தாரவன் - வண்டுகள் ஒலிக்கும் மாலையை அணிந்த
அரசனது; வாய்மை கேட்ட மங்கை - சொற்களைச் செவியுற்ற கைகேயி;
நெடுங் கணின் கொண்ட ஆலி- நீண்ட கண்களில் கொண்ட
நீர்த்துளிகள்; கொங்கை கோப்ப - மார்பில் வீழ(அமுது கொண்டு);
‘என்கண் அருள் உன்கண் ஒக்கின் - உன்னிடத்தில் உள்ள தானால்;
பண்டைய - முன்னே எனக்குக் கொடுத்தவற்றை;  பரிந்து அளித்தி -
அன்புகொண்டுஅளிப்பாய்;’ என்றாள் - என்ற சொன்னாள்.

     இப் பாட்டில்கைகேயி நயமாகப் பேசித் தயரதனது சூளுரையைப்
பெறவகை செய்கிறாள். ‘நெடுங்கணின் கொண்ட ஆலி’ என மாற்றில்
கூட்டுக.
பண்டையஎன்றது - சம்பரனோடு போர் நிகழ்ந்தபோது கைகேயி
உதவியதற்குத் தயரதன் மகிழ்ந்து கொடுத்த வரம் இரண்டையும்  குறித்தது.
பண்டைய - பலவின்பால் பெயர். தன் தருத்தை அறிந்தபின்னர் அரசன்
அதற்கு உடன்படுதல் அரிதாகலின் ‘பரிந்து அளித்தி’ என்றாள்.        10