கைகேயி வரம் வேண்டுதல் 1500. | வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை, கொண்ட நெடுங் கணின் ஆலி கொங்கை கோப்ப, ‘உண்டு கொலாம் அருள் என்கண்? உன்கண் ஒக்கின், பண்டைய இன்று பரிந்து அளித்தி’ என்றாள். |
வண்டு உளர்த தாரவன் - வண்டுகள் ஒலிக்கும் மாலையை அணிந்த அரசனது; வாய்மை கேட்ட மங்கை - சொற்களைச் செவியுற்ற கைகேயி; நெடுங் கணின் கொண்ட ஆலி- நீண்ட கண்களில் கொண்ட நீர்த்துளிகள்; கொங்கை கோப்ப - மார்பில் வீழ(அமுது கொண்டு); ‘என்கண் அருள் உன்கண் ஒக்கின் - உன்னிடத்தில் உள்ள தானால்; பண்டைய - முன்னே எனக்குக் கொடுத்தவற்றை; பரிந்து அளித்தி - அன்புகொண்டுஅளிப்பாய்;’ என்றாள் - என்ற சொன்னாள். இப் பாட்டில்கைகேயி நயமாகப் பேசித் தயரதனது சூளுரையைப் பெறவகை செய்கிறாள். ‘நெடுங்கணின் கொண்ட ஆலி’ என மாற்றில் கூட்டுக. பண்டையஎன்றது - சம்பரனோடு போர் நிகழ்ந்தபோது கைகேயி உதவியதற்குத் தயரதன் மகிழ்ந்து கொடுத்த வரம் இரண்டையும் குறித்தது. பண்டைய - பலவின்பால் பெயர். தன் தருத்தை அறிந்தபின்னர் அரசன் அதற்கு உடன்படுதல் அரிதாகலின் ‘பரிந்து அளித்தி’ என்றாள். 10 |