தயரதன் மீண்டும் வினவுதல்  

1512.இந் நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி,
நெய்ந் நிலை வேலவன், ‘நீ திசைத்தது உண்டோ?
பொய்ந் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ?
உன் நிலை சொல்; எனது ஆணை உண்மை!’ என்றான்.

     இந் நிலை நின்றவள் தன்னை - இந்நிலையில் நின்ற கைகேயியை;
எய்த நோக்கி- பொருந்தப் பார்த்து;  நெய்ந் நிலைவேலவன் - நெய்
பூசப்பட்ட வேலையுடைய தயரதன்; ‘நீ திசைத்தது  உண்டோ - நீ மனம்
பிரமித்தது உண்டோ?; பொய்ந் நிலையோர்கள் புணர்த்த - வஞ்சத்
தன்மையுடையவர்கள் எவரேனம் கட்டிச்சொன்ன;வஞ்சம் உண்டோ -
வஞ்சனைச் சொல் உள்ளதோ?; எனது ஆணை - என் மேல் ஆணையாக;
உன் நிலை உண்மை சொல் - இந்த உனது நிலையின் காரணத்தை
உண்மையாகச் சொல்வாய்;’என்றான் -.

     தயரதனுக்குக் கைகேயியின் மாறுபட்ட நிலை வியப்பாக இருத்தலின்,
‘நீ திசைத்தது உண்டோஅல்லது  பொய்ம்மையாளர்கள் எவரேனும் உன்
மனத்தைக் கெடுத்தனரோ?’ என்கிறான். முன்பு இராமன்மீதுஆணையிட்டுக்
கூறியவன் இப்பொழுது அவளக்கு அவன்பால் அன்பின்மையை உணர்ந்து
தன்மேல் ஆணை என்றான். திசைத்தல் - திகைத்தல்; பிரமித்தல்.      22