1516. | ‘ “நாரியர் இல்லை இஞ் ஞாலம் எங்கும்” என்ன, கூரிய வாள்கொடு கொன்று நீக்கி, யானும், பூரியர் எண்ணிடை வீழ்வென்’ என்று, பொங்கும் - வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான். |
வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான் - பெருவீரர்கள் வீரத்தையும் வென்று தன்னுள்அடக்கி நிலைபெற்ற வேற்படையை உடைய தயரதன்; இஞ் ஞாலம் எங்கும் - இவ்வுலக முழுவதிலும்; நாரியம் இல்லை என்ன - பெண்கள் இல்லை என்னும்படி; கூரிய வாள் கொடு கொன்றுநீக்கி - கூர்மை பொருந்திய வாளால் கொலை செய்து போக்கி; யானும் பூரியர் எண்ணிடைவீழ்வென் என்று - யானும் கீழ்மக்கள் எண்ணிக்கையில் சேருவேன் என்று; பொங்கும் -சினம் மிகுவான். கைகேயியின் மேல் எழுந்த சீற்றத்தால் தயரதன் பெண்கள் கூட்டத்தையே அழித்துவிட எண்ணினான்.ஆனால், அச்செயல் தகாது என்று அடங்கினான். இதனால் அவன் சீற்ற மிகுதி வெளிப்படுகிறது. 26 |