1516.‘ “நாரியர் இல்லை இஞ் ஞாலம் எங்கும்” என்ன,
கூரிய வாள்கொடு கொன்று நீக்கி, யானும்,
பூரியர் எண்ணிடை வீழ்வென்’ என்று, பொங்கும் -
வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான்.

     வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான் - பெருவீரர்கள்
வீரத்தையும் வென்று தன்னுள்அடக்கி நிலைபெற்ற வேற்படையை உடைய
தயரதன்;  இஞ் ஞாலம் எங்கும் - இவ்வுலக முழுவதிலும்; நாரியம்
இல்லை என்ன -
பெண்கள் இல்லை என்னும்படி;  கூரிய வாள் கொடு
கொன்றுநீக்கி -
கூர்மை பொருந்திய வாளால் கொலை செய்து போக்கி;
யானும் பூரியர் எண்ணிடைவீழ்வென் என்று - யானும் கீழ்மக்கள்
எண்ணிக்கையில் சேருவேன் என்று; பொங்கும் -சினம் மிகுவான்.

     கைகேயியின் மேல் எழுந்த சீற்றத்தால் தயரதன் பெண்கள்
கூட்டத்தையே அழித்துவிட எண்ணினான்.ஆனால், அச்செயல் தகாது
என்று அடங்கினான். இதனால் அவன் சீற்ற மிகுதி வெளிப்படுகிறது.     26