1526. | ‘நின் மகன் ஆள்வான்; நீ, இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம். உன் வயம் ஆமே; ஆளுதி; தந்தேன்; உரை குன்றேன்; என் மகன், என் கண், என் உயிர், எல்லா உயிர்கட்கும் நன்மகன் இந்த நாடு இறவாமை நய’ என்றான். |
‘நின்மகன் ஆள்வான்- ‘உனக்கு மகனாகிய பரதன் ஆட்சி புரிவான்; நீ இனிதுஆள்வாய் - நீ இன்பமாக அதிகாரம் செலுத்துவாய்; நிலம் எல்லாம் - மண்ணுலகம்முழுதும்; உன் வயம் ஆமே - உன் வழிப்பட்டதாக ஆகும்; ஆளுதி - ஆட்சிபுரிவாய்;தந்தேன் - கொடுத்தேன்; உரை குன்றேன் - பேச்சுத் தவறமாட்டேன்; என்மகன் - எனக்கு மகனும்; என் கண் - எனக்குக் கண்போன்றவனும்; என் மகன் - அனைத்து உயிர்களுக்கும் சிறந்த பிள்ளை போன்றவனுமான இராமன்; இந்த நாடு இறவாமை -இந்த நாட்டை விட்டு வெளியேறாமை மட்டும்; நய - விரும்பிடுவாய்;’ என்றான் -. இப்பாட்டின் பிற்பாதி தயரதன் இராமன்மீது கொண்டிருந்த அன்பின் மிகுதியையும், இராமன்சிறப்பையும் தெரிவிக்கிறது. ‘உன் உயிர்க்கு என நல்லன் மன்னுயிர்க்கு எலாம்’ (1350) எனவசிட்டன் உரைத்தது ஒப்பு நோக்கத்தக்கது. 36 |