1533. | ‘ஏண்பால் ஓவா நாண், மடம், அச்சம், இவையே தம் பூண்பால் ஆகக் காண்பவர் நல்லார்; புகழ் பேணி நாண்பால் ஓரா நங்கையர் தம்பால் நணுகாரே; ஆண்பாலாரே; பெண்பால் ஆரோடு அடைவு அம்மா? |
‘ஏண்பால்ஓவா - பெருமையின் பகுதியிலிருந்து நீங்காத; நாண், மடம் அச்சம்- நாணம், மடம், அச்சம் முதலிய; இவைதம் பூண்பால் ஆக - இவற்றைத் தம்முடையஅணிகலன்களாக; காண்பவர்நல்லார் - கருதுபவர் நற்பெண்டிர் ஆவர்; புகழ் பேணி-புகழை விரும்பி; நாண்பால் ஓரா நங்கையர் - நாணத்தின் தன்மையை அறியாத மகளிர்; தம்பால் நணுகாரே - தம் இனத்தில் சேர்ந்தவர் ஆகார்;ஆண்பாலாரே- (அவர்கள்) ஆண்மக்களே; பெண்பால் ஆரோடு அடைவு அம்மா- பெண்ணினத்தில் யாரோடுசார்ந்தவர் ஆவார்?’ (ஒருவரோடும் சார்ந்தவர் அல்லர்) பெண்களுக்குரிய சிறந்த பண்புகள் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்பன. உபலட்சணத்தால் பயிர்ப்பும் கொள்ளத் தக்கது. நாணம் - தகாதவற்றின்கண்உள்ளம் ஒடுங்குதல்; மடம் - அனைத்தும் அறிந்தும் அறியாதது போல் இருத்தல்; அச்சம் - என்றும்காணாததைக் கண்டவிடத்து அஞ்சுதல்; பயிர்ப்பு - தன் கணவன் அல்லாதவரின் கைமுதலியன மேற்படின் அருவருத்தல். ஆண்பாலாரே - ஏகாரம் தேற்றம்; நணுகாரே - ஏகாரம் அசை; அம்மா - வியப்பிடைச்சொல். 43 |