1546. | இன மலர்க் குலம்வாய் விரித்து, இள வாச மாருதம் வீச, முன் புனை துகிற்கலை சோர, நெஞ்சு புழுங்கினார் சில பூவைமார்; மனம் அனுக்கம் விட, தனித்தனி, வள்ளலைப் புணர் கள்ள வன் கனவினுக்கு இடையூறு அடுக்க, மயங்கினார் சில கன்னிமார். |
சில பூவைமார் - பெண்கள் சிலர்; இன மலர் குலம் வாய் விரித்து- பல்வகையானபூக்களின் கூட்டங்கள் வாய்விட்டு மலர; வாச இள மாருதம் வீச - நறுமணம் கலந்த இளங்காற்றுவீசுதலினால்; முன் புனை- முன்னே தாம் அரையில் உடுத்தியிருந்த; துகில் கலைசோர - அடையும் மேகலையும் குலைய; நெஞ்சு புழுங்கினார் - மனம் வருந்தினார்கள்; சில கன்னிமார் - மணமாகா மகளிர் சிலர்; மனம் அணுக்கம் விட - நெஞ்சில் உள்ள வருத்தம் தீர; தனித்தனி - தனித்தனியே (ஒவ்வொருவரும்); வள்ளலைப்புணர்- இராமபிரானைச் சேர்வதாகக் கண்ட; கள்ளம் வன் கனவுக்கு - மிக்க வஞ்சனையையுடையகனாவிற்கு; இடையூறு அடுக்க - காற்றினால் தடை பொருந்துதலினால்; மயங்கினார் -திகைத்தனர். தென்றல் வீசுவதனால் காம விருப்பம் மிகக் கணவனைப் பிரிந்த மாதர்கள் புழுங்கினர். திருமணமாகாதபெண் காற்றினால் தூக்கம் கலைந்து கனவு நீங்க, உண்மையறிந்து மயங்கினர். விரித்து -விரிய; செய்தென் எச்சம் செயவென் எச்சமாயிற்று; எச்சத்திரிபு. 56 |