குமுதங்கள் குவிதல்  

1547.சாய் அடங்க, நலம் கலந்து தயங்கு
     தன் குல நன்மையும்
போய் அடங்க, நெடுங் கொடுங் பழிகொண்டு,
     அரும் புகழ் சிந்தும் அத்
தீ அடங்கிய சிந்தையாள் செயல்கண்டு,
     சீரிய நங்கையார்.
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த -
     வண் குமுதங்களே.

     சாய் அடங்க - தன் பெருமை அழியவும்;  நலம் கலந்து  தயங்கு
தன்குல நன்மையும்-
நன்மை பொருந்தி விளங்குகின்ற  தனது  குலத்தின்
சிறப்பும்;  போய் அடங்க -  கெட்டழியவும்; நெடுங் கொடும் பழி
கொண்டு
- நெடுங்காலம் நிற்பதாகிய கொடிய பழியையேற்றும்; அரும்
புகழ் சிந்தும்
- பெறுதற்கரிய புகழைச் சிதறுகின்ற;  அத் தீ அடங்கிய
சிந்தையாள்-
அந்தக் கொடுமை பொருந்திய மனத்தையுடைய
கைகேயியினது;  செயல் கண்டு - தகாத செயலைப்பார்த்து;  சீரிய
நங்கைமார் வாய் -
சிறந்த பெண்களின் வாய்கள்;  அடங்கின என்ன-
அடங்கி மூடினாற்போல; வண்  குமுதங்கள் - வளப்பத்தையுடைய
செவ்வாம் பல் மலர்கள்;வந்து  குவிந்த - (இதழ்கள் கூடி) மூடின.

     ஆம்பல் மலர் காலையில் குவிதல் இயற்கை நிகழ்ச்சி. அது
கைகேயியின் கொடுமை கண்டு குலப்பெண்டிர்வாயடங்கியிருந்தாற்போன்று
இருந்தது என்பது தற்குறிப் பேற்றம். பழி கொண்டு புகழ் சிந்தினாள்என்பது
மாற்றுநிலை அணி (பரிவர்த்தனாலங்காரம்). தீ - உலமவாகு பெயர்;
தீப்போலும் கொடுமையைக்குறித்தது.                             57