தெருக்களில் மக்கள் நெருக்கம் 1562. | பாகு இயல் பவளச் செவ்வாய், பணை முலை, பரவை அல்குல், தோகையர் குழாமும், மைந்தர் சும்மையும் துவன்றி, எங்கும், ‘ஏகுமின், ஏகும்’ என்று என்று, இடை இடை நிற்றல் அல்லால், போகில; மீளகில்லா - பொன் நகர் வீதி எல்லாம். |
பொன் நகர் வீதி எல்லாம் - அந்த அழகிய நகரத்தின் தெருக்களில் எல்லாம்; பாக இயல் பவளச் செவ்வாய் - தேன்பாகு போன்ற இனிமையையும் பவளம் போன்றசெய்மையையும் உடைய உதடுகளையும்; பணை முலை - பருத்த தனங்களையும்; பரவை அல்குல்- பரந்த அரைப் பகுதியினையும் உடைய; தோகையர் குழாமும் - மகளிரது கூட்டமும்; மைந்தர் சும்மையும் - ஆடவர் கூட்டமும்; எங்கும் துவன்றி - எல்லாஇடங்களிலும் நெருங்கி; ஏகுமின் ஏகும் என்று என்று - செல்லுங்கள் செல்லுங்கள் என்றுபலமுறை சொல்லிக்கொண்டு; இடை இடை நிற்றல் அல்லால் - தாம் தாம் நின்றஇடங்களிலேயே நிற்பதை அன்றி; போகில - முன்னேறிச் செல்லவுமில்லை; மீளகில்லா- திரும்பிச் செல்ல ஆற்றலற்றனவும் ஆயின. இது நகரத்தில் உண்டான போக்குவரத்து நெருக்கடியைக் கூறுமுகமாகக் கூட்டத்தின் மிகுதியைப்புலப்படுத்தியது. தோகையர் - மயில்போலும் சாயலுடையவர். சும்மை - கூட்டம். 72 |