கூட்டத்தின் பெருக்கம் பற்றிய பேச்சு 1563. | ‘வேந்தரே பெரிது’ என்பாரும், ‘வேதியர் பெரிது’ என்பாரும், ‘மாந்தரே பெரிது’ என்பாரும், ‘மகளிரே பெரிது’ என்பாரும், போந்ததே பெரிது’ என்பாரும், ‘புகுவதே பெரிது’ என்பாரும், தேர்ந்ததே தேரிந் அல்லால், யாவரே தெரியக் கண்டார்? |
வேந்தரேபெரிது என்பாரும் - (அந்தக் கூட்டத்தில்) அரசர்களின் தொகுதியேமிகுதி என்பவரும்; வேதியர் பெரிது என்பாரும்- மறையவர் தொகுதியே மிகுதிஎன்பவரும்; மாந்தரேபெரிது என்பாரும் - ஆடவர் தொகுதியே மிகுதி என்பவரும்; மகளிரேபெரிது என்பாரும் - பெண்டிர் தொகுதியேமிகுதி என்பவரும்; போந்ததே பெரிது என்பாரும் - வந்து சேர்ந்தவர் கூட்டமே மிகுதிஎன்பவரும்; புகுவதே பெரிது என்பாரும் - வரப்போகும்கூட்டமே மிகுதியாக இருக்கும் என்பவரும் ஆக; தேர்ந்ததே தேரின் அல்லால்- தாம் அறிந்ததையே அறிந்ததன்றி; யாவரே தெரியக் கண்டார்- எவர்தாம் முழுவதும் நன்றாய் அறிந்தவர்? (ஒருவருமில்லைஎன்றபடி). இதனால் ஒவ்வொரு குழுவும் அளவிட முடியாதவாறு மிகுதியாய் இருந்தது என்பது குறிக்கப்பட்டது. வேந்தர் முதலியவர் அவரவர் தொகுதிக்கு ஆகிவந்தனர்; ஆகுபெயர். பெரிது என்னும் ஒன்றன்பால் வினைமுடிபுக்கு ஏற்ப அவ்வாறு கொள்ளல் வேண்டும். மகளிரைப் பின்னர்க் குறித்தமையின்மாந்தர் என்பது அவர்களை நீக்கி ஆடவரை மட்டும் கூட்டியது. 73 |