மன்னர்கள் முடிசூட்டு மண்டபம் புகுதல்  

1566.சந்திரர் கோடி என்னத் தரள
     வெண் கவிகை ஓங்க,
அந்தரத்து அன்னம் எல்லாம்
     ஆர்ந்தெனக் கவரி துன்ன,
இந்திரற்கு உவமை சாலும்
     இருநிலக் கிழவர் எல்லாம்
வந்தனர்; மௌலி சூட்டும்
     மண்டபம் மரபின் புக்கார்.

     இந்திரற்குஉவமை சாலும் - தேவேந்திரனுக்கு  உவமையாகத்தக்க;
இரு நிலக்கிழவர் எல்லாம் - பெரிய நாடுகளுக்குத்தலைவர்களான
அரசர்கள் எல்லாரும்;  சந்திரர்கோடி என்ன -சந்திரர்
எண்ணற்றோர்
என்னும்படி;  தரள வெண் கவிகை ஓங்க - முத்துகளால்ஆகிய
வெள்ளியகுடைகள் மேலோங்கவும்;  அந்தரத்து அன்னம் எல்லாம்
ஆர்ந்தெனத-
வானில் அன்னப்பறவைகள் எல்லாம் நிறைந்தன
என்னும்படி;  கவனி துன்ன - வெண்சாமரங்கள்நெருங்கவும்;வந்தனர் -
வந்து;  மௌலி சூட்டும் மண்டபம் -இராமபிரான் முடிபுனைதற்குரிய
மண்டபத்துள்; மரபின் புக்கார் - முறைப்படிபுகுந்தனர்.

     மன்னர்கள் தம் வரிசையோடு மண்டபத்தில்  முறைப்படி புகுந்தனர்
என்பது கருத்து. இன்பத்துய்ப்பில் இந்திரனுக்கு மேலானவர் என்பார்.
‘இந்திரற்கு உவகை சாலும்’ என்றார்.வெண்சாமரைகள் அசைவு,  நிறம்
ஆகியவற்றால் அன்னம் போல்வன.  வந்தனர் - முற்றெச்சம்.      76