வேதம் வல்லார் வருகை  

1567.முன் பயந்து எடுத்த காதல்
     புதல்வனை முறையினோடும்
இற் பயன் சிறப்பிப்பாரின்.
     ஈண்டிய உவகை தூண்ட,
அற்புதன் திருவைச் சேரும்
     அரு மணம் காணப் புக்கார் -
நல் பயன் தவத்தின் உய்க்கும்
     நான்மறைக் கிழவர் எல்லாம்.

     தவத்தின் நல் பயன் உய்க்கும் - தம் தவத்தின் ஆற்றலால் நல்ல
பயன்களைத்தருகின்ற; நால் மறை கிழவர் எல்லாம் - நான்கு
வேதங்களுக்கும் உரிய அந்தணர்எல்லோரும்; முன் பயந்து எடுத்த காதல்
புதல்வனை -
தாம் முற்படப் பெற்றெடுத்தஅன்புக்குரிய பிள்ளையை;
முறையினோடும் - முறைமையுடன்;  இல் பயன் சிறப்பிப்பாரின் -
இல்வாழ்க்கைப் பயனில் மேம்பட மணஞ்செய்விப்பவர் போல;  ஈண்டிய
உவகைதூண்ட-
மிக்க மகிழ்ச்சி செலுத்த; அற்புதன் திருவைச் சேரும்-
இராமபிரான்அரசத் திருவைச் சேர்கின்ற; அருமணம் காணப் புக்கார் -
அரிய திருமணத்தைக் காணமண்டபத்தினுள் புகுந்தனர்.

     தம் மூத்த மகனுக்குத் திருமணம் செய்விக்கும்போது  எவ்வளவு
உவகை கொள்வாரோ அவ்வளவுஉவகையோடு அந்தணர்கள் இராமபிரான்
முடிசூட்டுவிழாவைக் காண மண்டபத்தினுள் புகுந்தனர். அற்புதன் - மாய
விளையாட்டுடையவன்.                                         77