எங்கும் ஒளிவெள்ளம் 1569. | விளக்கு ஒளி மறைத்த, மன்னர் மின் ஒளி; மகுட கோடி துளக்கு ஒளி, விசும்பின் ஊரும் சுடரையும் மறைத்த; சூழ்ந்த அளக்கர் வாய் முத்த மூரல் முறுவலார் அணியின் சோதி, ‘வளைக்கலாம்’ என்று, அவ் வானோர் கண்ணையும் மறைத்த அன்றே. |
மன்னர்மின் ஒளி - மன்னர்களின் உடம்பின் ஒளிக்கதிர்கள்; விளக்கு ஒளி மறைத்த - விளக்கின் ஒளியைமறையச் செய்தன; மகுட கோடி துளக்கு ஒளி - மகுடங்களின் தொகுதிகள் அசைதலால் உண்டாகும் ஒளிக்கற்றைகள்; விசும்பின் ஊரும் சுடரையும்மறைக்கு- வானத்தில் செல்லும் சூரியனையும் மறைந்தன; சூழ்ந்த அளக்கர் வாய்முத்தமூரல் முறுவலார்-பூமியைச் சூழ்ந்துள்ள கடலில் தோன்றிய முத்துப் போன்ற பற்களையும் புன்னகையையும் உடையபெண்களுடைய; அணியின் சோதி - ஆபரணங்களின் ஒளிக்கதிர்கள்; வளைக்கலாம்என்று- தேவலோகத்தையும் வளைத்துக் கொள்ளலாம் என்று கருதி; அவ்வானோர் கண்ணையும் - அந்தக் தேவர்களின் கண்களையும்; மறைத்த- மறைத்தன; கோடி என்பது மிகுதி குறித்தது. ‘மறைத்த’ என்னும் பலவின்பால் வினைமுற்றுக்கேற்ப ஒளி, சோதி என்பவற்றை ஒளிக்கதிர்கள் என்று பன்மையாகக் கொள்ளல் வேண்டும். இன்றேல், ஒருமைபன்மை மயக்கமாகும். அன்று, ஏ - அசைகள். 79 வசிட்ட முனிவன் வருகை |