வசிட்ட முனிவன் செயல் 1571. | கங்கையே முதல ஆய கன்னி ஈறு ஆன தீர்த்த மங்கலப் புனலும், நாலு வாரியின் நீரும் பூரித்து. அங்கியின் வினையிற்கு ஏற்ற யாவையும் அமைத்து, வீரச் சிங்க ஆசனமும் வைத்து, செய்வன விறவும் செய்தான். |
கங்கை முதல் ஆய - கங்கையாறு முதலாக; கன்னி ஈறு ஆன - குமரியாறு ஈறாகஉள்ள; தீர்த்த மங்கலப் புனலும் - புன்ணிய தீர்த்தங்களின் மங்களகரமான நீரையும்; நாலு வாரியின் நீரும் - நான்கு கடல்களில் நீரையும்; பூரித்து - குடங்களில்நிறைத்துவைத்து; அங்கியின் வினையிற்கு - அக்கினியில் செய்யவேண்டும் ஓமம் முதலியசடங்குகளுக்கு; ஏற்ற யாவையும் அமைத்து - பொருந்திய எல்லா வற்றையும்தக்கவாறு செய்து; வீரச் சிங்க ஆதனமும் வைத்து - வீர சிம்மாசனத்தையும் உரிய இடத்தில் அமைத்து; செய்வன பிறவும் செய்தான் - மேலும் செய்ய வேண்டுவனவற்றையும்செய்தான். வசிட்ட முனிவன் ஒமத்திற்கும் நீராட்டத்திற்குத் வேண்டுவன எல்லா வற்றையும்அமைத்துவைத்தான். அங்கியின் வினை - ஓமம்; அதற்குரியன அட்சதை, தருப்பை, சமித்து,நெய், அகப்பை முதலியன. ‘பிறவும்’ என்பது ஓமத்திற்குரிய புரோகிதர் முதலாயினோரைவரித்தல், அங்குரார்ப்பணம். சுமங்கலி அமைத்தல், யானை, குதிரை, அத்திமரத்தால் செய்தபீடம் முதலிய வற்றைக் குறித்தது. 81 |