சுமந்திரன் இராமனை அழைத்தல் 1575. | ‘கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார், உன்னைப் பெற்றவன் தன்னைப் போலப் பெரும் பரிவு இயற்றி நின்றார்; சிற்றவைதானும், “ஆங்கே கொணர்க” எனச் செப்பினாள்; அப் பொன் - தட மகுடம் சூடப் போதுதி, விரைவின்’ என்றான். |
‘கொற்றவ- அரசர்களும்; முனிவர் - இருடிகளும்;மற்றும் குவலயத்துஉள்ளார் - பின்னும் இந்நிலவுலகத்தில் உள்ள மக்களும்; உன்னைப் பெற்றவன்தன்னைப் போல - உன்னைப்பெற்ற தயரதனைப் போல; பெரும் பரிவு இயற்றி நின்றார் -(உன்னிடம்)மிகுந்த அன்பைக் காட்டி நின்றார்; சிற்றவைதானும் - சிற்றன்னையாகிய கைகேயியும்; ஆங்கே கொணர்க எனச் செப்பினாள் - அவனிடம்உன்னை அழைத்து வருமாறு சொன்னாள்; அப் பொன்தட மகுடம் சூட- (ஆதலால்) அந்தப் பொன்னால் ஆகியபெரிய முடியை (நீ) சூடுவதற்கு; விரைவின் போதி - விரைவாக வருவாய்;’ என்றான் -என்று சுமந்திரன் சொன்னான். கொணர்கென - தொகுத்தல் விகாரம்; அகரம் தொக்கது. அவை - அவ்வை; தாய்; இடைகுறைந்தது. 85 |