இராமன் தேரில் ஏறிச் செல்லுதல் 1576. | ஐயனும், அச் சொல் கேளா, ஆயிர மெளிலியானைக் கைதொழுது, அரச வெள்ளம் கடல் எனத் தொடர்ந்து சுற்ற, தெய்வ கீதங்கள் பாட, தேவரும் மகிழ்ந்து வாழ்த்த, தையலார் இரைத்து நோக்க, தார் அணி தேரில் சென்றான். |
ஐயனும் - இராமபிரானும்; அச் சொல்கேளா - அந்தச் சொற்களைக் கேட்டு;ஆயிரம் மௌலியானைக் கைதொழுது - ஆயிரம் திருமுடிகளையுடைய திருமாலை வணங்கி; அரசவெள்ளம் - அரசர் கூட்டம்; கடல் எனத் தொடர்ந்து சுற்ற - கடல் போலப் பின்தொடர்ந்து சூழவும்; தெய்வ கீதங்கள் பாட - கடவுளைப் போற்றும் இசைகளை இசைவாணர்கள் பாடிவரவும்; தேவரும் மகிழ்ந்து வாழ்த்த - (வானில் கூடிய) தேவர்களும்உவகைகொண்டு வாழ்த்தவும்; தையலார் இரைத்து நோக்க - மகளிர் ஆரவாரித்துத் தன்னைவிரும்பிப் பார்க்கவும்; தார் அணி தேரில் சென்றான் - மாலைகளால் ஒப்பனைசெய்யப்பட்ட தேரில் போனான். இராமன் சுமந்திரன் சொற்கேட்டுத் தன் குலதெய்வமான அரங்கநாதனைத் தொழுது தேரில் புறப்பட்டான். இரைத்தல் - மகிழ்ச்சியால் ஆரவாரித்தல். 86 |