முனிவர் முதலியோர் நினைப்பும் பேச்சும் 1581. | இனையராய் மகளிர் எல்லாம் இரைத்தனர், நிரைத்து மொய்த்தார்; முனைவரும், நகர மூதூர் முதிஞரும் இளைஞர் தாமும், அனையவன் மேனி கண்டார், அன்பினுக்கு எல்லை காணார், நினைவன மனத்தால், வாயால் நிகழ்த்தது, நிகழ்த்தலுற்றாம்; |
மகளிர் எல்லாம் - பெண்கள் எல்லாரும்; இனையராய் - இத் தன்மையினராய்; இரைத்தனர் ஆரவாரித்து; நிரைத்து மொய்த்தார் - கூட்டமாகி(இராமபிரானை) நெருங்கினார்கள்; முனைவரும் - பற்றற்ற முனிவர்களும்; நகர மூதூர்முதிஞரும் - அயோத்தி நகரமாகிய அந்தப் பழைய ஊரில் வாழும் மூத்தவர்களும்; இளைஞர்தாமும் - சிறியவர்களும்; அனையவன் மேனி கண்டார் - இராமபிரானது திருமேனி அழகைக் கண்டு; அன்பினுக்கு எல்லை காணார்- அவன் மீது கொண்ட அன்புக்கு வரம்பு காணாமல்; மனத்தால் நினைவன - மனத்தால் நினைப்பனவற்றையும்; வாயால்நிகழ்ந்தது - வாயால் கூறியதையும்; நிகழ்த்தலுற்றாம் - சொல்லத்தொடங்குவோம். இராமபிரான் சிறப்புகள் அனைவரையும் ஈர்க்க வல்லவனவாதலின், பற்றற்ற முனிவர்களும்அவன் முடிசூட்டிக்கொள்வதைக் காண விருப்பம் கொண்டு வந்தனர் என்பதாம். நிகழ்ந்தது -நிகழ்த்தியது; பிறவினை விகுதி மறைந்துள்ளது. இதனை அந்தர்ப்பாவிதணிச் என்பர் வடநூலார். கண்டார், காணார் - முற்றெச்சங்கள். 91 |