1586. | ‘ஆர்கலி அகழ்ந்தோர், கங்கை அவனியில் கொணர்ந்தோர், முந்தைப் போர் கெழு புலவர்க்கு ஆகி அசுரரைப் பொருது வென்றோர். பேர்கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது, ஐயன் தார் கெழு திரள் தோள் தந்த புகழினைத் தழுவி’ என்பார். |
ஆர்கலி அகழ்ந்தோர் - கடலைத் தோண்டியவரும்; கங்கை அவனியில்கொணர்ந்தோர் - ஆகாய கங்கையை உலகத்திற்குக் கொண்டுவந்தவரும்; முந்தை -பழமையாகிய; போர் கெழு புலவர்க்கு ஆகி - (அசுரரோடு) போர்மிக்க தேவர்களுக்குத்துணையாகி; அகரரைப் பொருது வென்றோர்- அசுரர்களைப் போரிட்டு வெற்றிபெற்றவரும் (ஆகிய இக் குலத்து முன்னோர் பலருக்கும்); பேர் கெழு சிறப்பின் வந்த - விளங்குகின்ற மேன்மையோடு உண்டாகிய; பெரும் புகழ் நிற்பது - மிக்க கீர்த்திநிலைத்து நிற்பது; ஐயன் தார் கெழு - இராமபிரானது வெற்றிமாலை பொருந்திய; திரள்தோள்தந்த புகழினை - திரண்ட தோள்கள் உண்டாக்கிய கீர்த்தியை; தழுவி -தழுவியே யாம்; என்பார். ஆர்கலி அகழ்ந்தவர் சகரர்; கங்கை தந்தோன் - பகீரதன்; அசுரரை வென்றோர் -ககுத்தன், முசுகுந்தன் முதலியோர். ஐயன் திரள் தோற்களுக்குத் தாடகைவதம், சிவனது வில்லைமுறித்தது, பரசுராமனை அடக்கியது. ஆகியவற்றால் புகழ் உண்டாயிற்று. புலவர் -அறிவினையுடைய தேவர்கள். அசுரர் - சுரர்க்குப் பகைவர். சுரர் - தேவர்; அமுதத்தை (சுராவை)உண்டவர். 96 |