1590. | ‘கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன், தேர்மிசை, நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ? கூர் கனக ராசியொடு கோடி மணியாலும் தூர்மின், நெடு வீதியினை’ என்று சொரிவாரும். |
கார் மினொடு உலாயது என - மேகம் மின்னலொடு உலாவியது போல; நூல் கஞலும்மார்பன் - முப்புரி நூல் விளங்கும் மார்பையுடைய இராமபிரான்; நம் வாயில் -நமது வீட்டு வாயில் வழியாக; தேர்மிசை - தேரின்மேல்; கடிது ஏகுதல் செய்வானோ- வேகமாகக் கடந்து சென்றுவிடுவானோ?; கூர் கனக ராசியொடு - (அத்தேரைத்தடுப்பதற்காக) மிகுந்த பொற்குவியலோடு; கோடி மணியாலும் - அளவற்ற மனணிகளாலும்; நெடு வீதியினைத் தூர்மின் - பெரிய தெருவினை நிரப்புங்கள்; என்று சொரிவாரும் -என்று சொல்லிக்கொண்டு அவற்றைக் கொட்டுவாரும் சிலர். இராமன் வடிவழகைக் காண அவனது தேர் விரைந்து செல்லாதபடி பொன்னையும் மணியையும்வழியில் கொட்டும்படி சொல்லிச் சிலர் அவற்றைப் பொழிந்துவைத்தனர். கார் - இராமன்திருமார்பிற்கும், மின்னல் முப்புரி நூலுக்கும் உவமை. 100 |