1591.‘தாய் கையில் வளர்ந்திலன்;
     வளர்த்தது, தவத்தால்
கேகயன் மடந்தை; கிளர்
     ஞாலம் இவன் ஆள,
ஈகையில் உவந்த அவ்
     இயற்கை இது என்றால்,
தோகை அவள் பேர் உவகை
     சொல்லல் அரிது?’ என்பார்.

     தாய் கையில் வளர்ந்திலன் - இராமபிரான் ஈன்ற  தாயாகிய
கோசலையின் கையில்வளர்ந்தானில்லை; வளர்ந்தது - அவனை வளர்த்தது;
தவத்தால் கேகயன் மடந்தை -முன்செய்த தவப்பயனால் கேகயமன்னன்
மகளாகிய கைகேயியை;  கிளர் ஞாலம் இவன் ஆள -(அதனால்)
விளங்குகின்ற நாட்டினை இவ் இராமன் ஆள; ஈகையில் உவந்த -
கொடுப்பதில்(பெற்ற தாய்போல) மகிழ்ச்சியுற்ற;  இயற்கை இது என்றால்-
(அவளது) தன்மைஇதுவாயின்; தோகை அவள் பேர் உவகை - அக்
கைகேயியினது பெருங்களிப்பு;  சொல்லல்அரிது - சொல்லுதல் முடியாது;
என்பார் - என்று கூறுவார்கள்.

     இராமனை வளர்த்தவன் கைகேயியாதலின் அவளுக்கே மிக்க மகிழ்ச்சி
உண்டு என்றனர்சிலர்.  அவள் இந்நாள் வரை  இராமனிடம் பேர்புன்
கொண்டவனாய் இருந்தமையை அனைவரும்அறிவராதலின் இவ்வாறு
கூறினர்.                                                     101