1596. | புக்கவன் தன்னை நோக்கி, புரவலர், முனிவர், யாரும், ‘தக்கதே நினைந்தான்; தாதை தாமரைச் சரணம் சூடி, திக்கினை நிமிர்ந்த கோலச் செங்கதிர்ச் செல்வன் ஏய்ந்த மிக்கு உயர் மகுடம், சூட்டச் சூடுதல் விழுமிது’ என்றார். |
புரவலர் முனிவர் யாரும் - அரசர்களும், முனிவர்களும் மற்றுள்ள எல்லோரும்; புக்கவன் தன்னை நோக்கி - கைகேயியின் மாளிகையில் எல்லோரும்; புக்கவன் தன்னைநோக்கி - கைகேயின் மாளிகையில் புகுந்த இராமபிரானைக் கண்டு; ‘தக்கதேநினைந்தான் - இராமன் தகுதியான செயலையே எண்ணினான்; தாதை தாமரைச் சரணம் சூடி - தன் தந்தையின் தாமரை மலர் போலும் திருவடிகளை முன்னதாக வணங்கி; திக்கினில்நிமிர்ந்த கோலச் செங்கதிர் - எல்லாத் திசைகளிலும் உயர்ந்து தோன்றுகிறதுவடிவுபடைத்த செந்நிறக் கதிர்களைச் செல்வமாக உடைய சூரியன் தொடங்கி; ஏய்ந்த மிக்குஉயர் மகுடம் - அணிந்த மிக உயர்ந்த கிரீடத்தை; சூட்ட - நூல்முறைப்படி அணிவிக்க; சூடுதல் விழுமிது என்றார் - தான் அணிந்துகொள்வது சிறந்தது என்றார். விழா மண்டபத்தில் இருந்தோர் முடிசூடுவதற்கு முன்னே இராமன் தந்தையை வணங்கி வாழ்த்துப்பெறப்போகிறான் என்று கருதி அவனைப் பாராட்டினர். தாமரைச் சரணம் - உவமத்தொகை. 106 |