கூற்றம் அன்ன கைகேயி கூற்று 1599. | நின்றவன்தன்னை நோக்கி, இரும்பினால் இயன்ற நெஞ்சின் கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர்இன்றிக் கொடுமை பூண்டாள், ‘இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின், ஆகும்: ஒன்று உனக்கு உந்தை, மைந்த! உரைப்பது ஒர் உரை உண்டு’ என்றாள். |
இரும்பினால் இயன்ற நெஞ்சின்- இரும்பினால் ஆகிய மனத்தோடு; கொன்று உழல்கூற்றம் என்னும் பெயர் இன்றி - உயிர்களைக் கொன்று திரியும் எமன் என்னும்பெயர்மட்டும் இல்லாமல்; கொடுமை பூண்டாள் - அவனுடைய கொடுந்தன்மையைமேற்கொண்டவளாகிய கைகேயி; ‘மைந்த - மகனே; உந்தை உனக்கு உரைப்பது -உன் தந்தை உனக்குச் சொல்வதாகிய; ஓர் உரை ஒன்று உண்டு - சொல் ஒன்று உள்ளது; இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயது என்னில் - இப்பொழுது எனக்கு (உன்னிடம் அதைச்)சொல்வது பொருத்தமானது என்று நீ கருதினால்; ஆகும் என்றாள் - நான் அதனைத்தெரிவிக்கலாம் என்றாள். கைகேயி தான் சொல்லப்போவது இன்னாத சொல்லாதலின் அதனை விரையக் கூறாது, இராமனுடையஇசைவு பெற்றுத் தெரிவிக்க எண்ணி நயமாகப் பேசுகிறாள். இது கைகேயியின் வஞ்சக மனத்தைக்காட்டுகிறது. 109 |