இராமனின் பணிவுரை  

1600.‘எந்தையே ஏவ, நீரே
     உரைசெய இயைவது உண்டேல்,
உய்ந்தனென் அடியேன்; என்னின்
     பிறந்தவர் உளரோ? வாழி!
வந்தது, என் தவத்தின் ஆய
     வரு பயன்; மற்று ஒன்று உண்டோ?
தந்தையும், தாயும், நீரே;
     தலைநின்றேன்; பணிமின்’ என்றான்.

     ‘எந்தையேஏவ - என் தந்தையாரே கட்டளைவிட; நீரேஉரை
செய இயைவது உண்டேல்-
(அதனை) நீரே தெரிவிக்க இசைவதானால்;
அடியேன் உய்ந்தனென் - நான்ஈடேறிவிட்டேன்;என்னின் பிறந்தவர்
உளரோ -
என்னைச் காட்டிலும் (மேன்மைஅடையும்படி) பிறந்தவர்
வேறொருவர் இருக்கின்றாரோ? (இல்லை);  என் தவத்தின்
ஆய
பயன் வந்தது -
என்முன்னைத் தவத்தால் உண்டாகிய பயன்
வந்துவிட்டது;  வரு பயன் மற்று ஒன்று உண்டோ? - இதனினும்
சிறந்ததாக வரக்கூடிய நற்பயன் பிறிதொன்று உள்ளதோ? (இல்லை);
தந்தையும்தாயும் நீரே - எனக்கு நன்மையானவற்றைச்செய்யும்
தகப்பனும்,  இனிமையானவற்றைச்செய்யும் தாயும் நீரே ஆவீர்;
தலைநின்றேன் பணிமின் என்றான் - நீர்சொல்லப்போவதைத்
தலைமேற் கொண்டு நின்றேன் கட்டளையிடுங்கள்;’ என்றான்-.

     இதனால் தாய் தந்தையரிடம் இராமன் காட்டிய மரியாதை
புலப்படுகிறது.  நீரே - பிரிநிலைஏகாரம் .  வாழி - முன்னிலை அசை.
தலைநின்றேன் - கால வழுவமைதி;  தெளிவுபற்றிஎதிர்காலம்  இறந்த
காலமாயிற்று. பயன் - இடைநிலை விளக்காக நின்று முன்னும் பின்னும்
இயைந்தது.                                             110