1603. | தெருளுடை மனத்து மன்ன ஏவலின் திறம்ப அஞ்சி, இருளுடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான், உருளுடைச் சகடம் பூண்ட, உடையவன் உய்த்த கார் ஏறு அருளுடை ஒருவன் நீக்க அப் பிணி அவிழ்ந்தது ஒத்தான். |
தெருள் உடை மனத்து - தெளிவு பொருந்திய நெஞ்சினையுடைய; மன்னன் ஏவலின்திறம்ப அஞ்சி- தயரத மன்னனின் கட்டளையிலிருந்து மாறுபடுவதற்குப் பயந்து; இருள்உடை உலகம் தாங்கும் - துன்ப இருள் நிறைந்த உலகத்தைத் தாங்குகின்ற; இன்னலுக்குஇயைந்து நின்றான் - துன்பத்திற்கு ஒருப்பட்டு நின்றவனாகிய இராமன்; உருள் உடைச்சகடம் பூண்ட - சக்கரத்தையுடைய வண்டியில பூட்டப்பட்ட; உடையவன் உய்த்த கார் ஏறு -உடையவனாலே செலுத்தப்பட்ட கரிய காளையானது; அருள் உடை ஒருவன் நீக்க - கருணையையுடைய ஒருவன் வண்டியிற் பூட்டிய பூட்டினை அவிழ்த்து விட; அப் பிணி அவிழ்ந்ததுஒத்தான் - அப் பிணிப்பிலிருந்து விடுபட்டதைப் போல ஆனான். அரசபாரத்தை வண்டியாகவும், அதனைச் சுமப்பவனை வண்டியிற் பூட்டிய காளையாகவும் கூறுதல்மரபாதலால், அரசச் சுமையை நீங்கிய இராமன் வண்டிச் சுமையை நீங்கிய எருதுபோல வருத்தம்நீங்கி இருந்தனன் என்றவாறு. இஃது உவமை அணி. சகடம் - அரசாட்சி; உடையவன் - தயரதன்;கார் ஏறு - இராமன் இருள் - இடத்து நிகழ் பொருளின் தன்மை இடத்தின்மேல் ஏற்றிஉரைக்கப்பட்டது. நின்றான் - வினையாலணையும் பெயர். 113 |