1607. | ‘புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால் நனைந்திலன்; என்கொல்?’ என்னும் ஐயத்தாள் நளின பாதம். வனைந்த பொன் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி, ‘நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு?’ என்றாள். |
‘மௌலி புனைந்திலன் - மகுடம் சூடவில்லை; குஞ்சி - தலைமுடி; மஞ்சனப் புனித நீரால் நனைந்திலன் - அபிடேகமாகிய தூய நதிகளின் தண்ணீரால் நனையப்பெற்றான்இல்லை; என்கொல்?’ - என்ன காரணம்; என்னும் ஐயத்தாள் -என்கின்ற சந்தேகத்தை உடையவளாக இருக்கின்ற கோசலைத்தாயின்; நளின பாதம் -தாமரையாகிய அடிகளை; வனைந்த பொன் கழற்கால் வீரன் வணங்கலும் - பொன்னாற்செய்யப்பெற்ற வீரக்கழல் அணிந்த இராமன் வணங்கிய அளவில்; குழைந்து வாழ்த்தி - மனம் உருகி ஆசி கூறி; ‘நினைந்தது என்?’ - சக்கரவர்த்தி எண்ணிய செயல்என்னாயிற்று; நெடுமுடி புனைதற்கு இடையூறு உண்டோ? - உயர்ந்த மகுடத்தைச் சூடுதற்குஏதேனும் தடை உளதோ;’ என்றாள் - என்று கேட்டாள். குஞ்சி - ஆடவர் தலைமுடி. மகனை முதல் வாழ்த்தினாள், பின்னர் வினவினாள் என்பதுஅறியற்பாலது. 2 |