கோசலை துயரம் 1613. | ஆங்கு, அவ் வாசகம் என்னும் அனல், குழை தூங்கு தன் செவியில் தொடராமுனம், ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள்; மனம் வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் அரோ. |
ஆங்கு - அப்பொழுது; அவ் வாசகம் என்னும் அனல் - (இராமன் காடு செல்லவேண்டும் என்று தயரதன் கூறிய) அந்த வார்த்தை என்கிற நெருப்பு; குழை தூங்கு தன் செவியில்தொடராமுனம் - காதணி அசைகின்ற தன்னுடைய காதுகளில் வந்து விழுதற்கு முன்னமே (கோசலை); ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள் - இரங்கி, மெலிந்து, தடுமாறி; மனம்வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் - மனம் வீங்கி, வருந்தி, மயக்கமுற்றுக்கீழே விழுந்தாள். ‘வாசகம் என்னும் அனல்’ என்பது, ‘ஊர் எனப்படுவது உறையூர்’ என்றார்போல வாசகத்தின்கொடுமை உணர்த்தி நின்றது. நெருப்புச் சேர்த்தாரைச் சுடும், இவ்வாசகம் சேராமுன்னமே சுடும்தன்மை படைத்தது என்பதாம். தூங்குதல் - தொங்கதல்; காதில் இறுக அணிவது தோடு; தொங்க அணிவது குழை; தொங்கூட்டம் என்று இவ்வணியைக் கூறுவர். ‘அரோ’ ஈற்றசை. 8 |