1622. | ‘விண்ணும் மண்ணும், இவ் வேலையும், மற்றும் வேறு எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும், அண்ணல் ஏவல் மறுக்க, அடியனேற்கு ஒண்ணுமோ? இதற்கு உள் அழியேல்’ என்றான். |
‘விண்ணும் - ஆகாயமும்; மண்ணும் - பூமியும்; இவ்வேலையும் - இந்தக் கடல்களும்; மற்றும் வேறு எண்ணும் பூதம் எலாம்- வேறாகிய தீ, காற்று முதலாகிய மூலப்பொருள்களும்; அழிந்து ஏகினும் - மாறுபட்டுக் கெட்டுப் போனாலும்; அண்ணல் - தயரதனது; ஏவல் - கட்டளையை; மறுக்க - மறுப்பதற்கு; அடியனேற்கு ஒண்ணுமோ - அடியேனுக்குத் தகுமோ; இதற்கு -; உன் அழியேல்’ -(நீ) மனம் வருந்தாதே;’ என்றான் -. ‘ஏகினும்’ என்பது அவை நிலை கெடாமை உணர்த்தி நின்றது - தயரதன் கட்டளையை அவ்வாறேநிறைவேற்றுதலே தனக்குத் தகுதி என்றான் இராமன். 17 |