கோசலை மகனைக் கான் ஏகாது  தடுக்கத் தயரதனிடம் சேறல்  

1631.இத் திறத்த எனைப் பல வாசம்
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா,
‘எத் திறத்தும் இறக்கும் இந் நாடு’ எனா,
மெய்த் திறத்து விளங்கிழை உன்னுவாள்.

     மெய்த் திறத்து விளங்கிழை - சத்தியமாகிய அணிகலனை அணிந்த
கோசலை; இத்திறத்து  எனைப் பல வாசகம் உய்த்து  உரைத்த மகன்
உரை
- மேற் கூறியவாறு  பலவார்த்தைகளைக் கொண்டு வந்து சொல்லித்
தேற்றிய இராமனது சொற்களை;  உட்கொளா -மனத்தில் கொண்டு; ‘எத்
திறத்தும் இந்நாடு இறக்கும்’ எனா -
எப்படியும் இவன்இந்நாட்டைக்
கடந்து காடு செல்வான் என்று;  உன்னுவாள் - மனத்தில் கருதுபவளாகி,

     தடுக்கத் தயரதன்பால் சென்றாள் என்று அடுத்த செய்யுளில் முடியும்.
உன்னுவாள் -முற்றெச்சம்.  காடு செல்லாமல் தயரதன் மூலம் ஆணையை
மாற்றலாம் என்பது  கோசலைகருத்து.                            26