இராமன் சுமித்திரை மாளிகை அடைதல் 1633. | போகின்றாளைத் தொழுது, புரவலன் ஆகம் மற்று அவள்தன்னையும் ஆற்றி, இச் சோகம் தீர்ப்பவள்’ என்று, சுமித்திரை மேகம் தோய் தனிக் கோயிலை மேயினான். |
(இராமன்) போகின்றானைத் தொழுது - செல்கின்ற கோசலையை வணங்கி; புரவலன்ஆகம் மற்று அவள் தன்னையும் - தயரதனது உடம்பையும் கோசலையையும்; ஆற்றி -துன்பத்திலிருந்து ஆறுதல் அடையச் செய்து; இச்சோகம் தீர்ப்பவள்’ - இந்தத் துயரநிலையை நீக்கக்கூடியவள்; என்று - எனக் கருதி; சுமித்திரை -சிற்றன்னையாகிய சுமித்திரையின்; மேகம் தோய் தனிக்கோயிலை - மேகம்தங்குகின்ற உயர்ந்த ஒப்பற்ற மாளிகையை; மேயினான் - அடைந்தான். ‘புரவலனது ஆகமாகிய மற்றவள்’ எனவும் உரைப்பர். ‘மன்னன் உயி்ர் அவள் உடல்’என்றார். 28 கோசலை தயரதன் நிலை கண்டு புலம்புதல் |