1634. | நடந்த கோசலை, கேகய நாட்டு இறை மடந்தை கோயிலை எய்தினள்; மன்னவன் கிடந்த பார்மிசை வீழ்ந்தனள் - கெட்டு உயிர் உடைத்த போழ்தின் உடல் விழுந்தென்னவே. |
நடந்த கோசலை - தயரதன் இருக்கும் இடத்துக்கு நடந்து சென்ற கோசலை; கேகயநாட்டு இறை மடந்தை - கேகய நாட்டு மன்னனுக்கு மகளாகிய கைகேயியின்; கோயிலை -மாளிகையை; எய்தினள் - அடைந்தாள்; மன்னவன் கிடந்த பார்மிசை - தயரதன்விழுந்து கிடக்கின்ற மண்ணில்; உயிர் கெட்டு உடைந்த போழ்தின் - உயிர் கெட்டுச்சிதறிய காலத்து; உடல் விழுந்து என்னவே - உடலானது கீழே விழுந்தாற் போல; வீழ்ந்தனள் - விழுந்தாள். 29 |