| 1636. | ‘இருள் அற்றிட  உற்று ஒளிரும்      இரவிக்கு எதிரும் திகிரி  உருளத் தனி உய்த்து, ஒரு கோல் நடையின்      கடை காண் உலகம்  பொருள் அற்றிட முற்றுறும்      அப் பகலில் புகுதற்கு என்றோ,  அருளக் கருதிற்று இதுவோ?      அரசர்க்கு அரசே!’ என்னும். |  
      ‘அரசர்க்கு அரசே!’ -  சக்கரவர்த்தியே;  இருள் அற்றிட உற்று  ஒளிரும்இரவிக்கு - இருள் ஒழியும்படி பொருந்தி விளங்குகின்ற  சூரியனுக்கு; எதிரும் திகிரி -ஒப்பாகிய ஆணைச் சக்கரத்தை;   உருளத்தனி உய்த்து - உலகெங்கும் செல்லும்படி ஏகசக்ராதிபதியாகச்  செலுத்தி; ஒரு கோல் நடையின் - ஒப்பற்ற செங்கோல் செலுத்தப்  படுதலின்;  கடைகாண்  உலகம் - யாதொரு இடையூரும்  இன்றி முடிவு  அழியும்படி;  முற்றுறும் அப்பகலில் - முடிவடைகின்ற அந்த  ஊழிக்காலத்தில்;  புகுதற்கு என்றோ அருளக்கருதிற்று - செல்லும்படி  நுழைதற்காகவோ நீ அருள்கொண்டு செய்யக் கருதிய செயல்;  இதுவோ? -  இதுதானோ;  என்னும் - என்பாள்.      மக்களது வறுமை, அறியாமை இருளகல விளங்குதல், நாட்டின் எல்லா  இடங்களிலும் செல்லுதல்ஆகியவற்றால் சூரியனுக்கு ஒப்பானது  ஆணைச்  சக்கரம் என்பதாம். உன் அரசாட்சியில் நலம்பெற்றஉலகம்  பிரளயகாலத்து  அழியை அடையக் கருதியோ இத்தகைய செயலைச் செய்யக் கருதியது  என்றுதயரதனை நோக்கிப் புலம்பினள் கோசலை.                   31  |