1637. | ‘திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே! திருவின் திருவே! நிரை ஆர் கலையின் கடவே! நெறி ஆர் மறையின் நிலையே! கரையா அயர்வேன்; எனை, நீ, கருணாலயனே! “ என்?” என்று உரையா இதுதான் அழகோ? உலகு ஏழ் உடையாய்!’ என்னும். |
‘திரைஆர் கடல்சூழ் உலகின் தவமே! - அலை பொருந்திய கடலாற் சூழப்பெற்றஉலகம் செய்த தவத்தின் பயனே; திருவின் திருவே!-செல்வங்களுக்கெல்லாம்மேலான செல்வமே; நிரை ஆர் கலையின் கடவே! - ஒழுங்குபொருந்திய கல்விக்கலையில் கடல் ஆனவனே; நெறி ஆர் மறையின் நிலையே! -நீதிபொருந்திய வேதத்தின் உன்மைப் பொருளே; கருணாலயனே! -அருட்கோயிலாக உள்ளவனே; உலகு ஏழ் உடையாய்! - ஏழ் உலகங்களையும்உடையவனே; கரையா அயர்வேன் எனை -மனம் உருகிச் சோர்வடைகின்ற என்னை; நீ என் என்று உரையா இதுதான் அழகோ’ - நீஏன்வருந்துகிறாய் என்று ஆறுதல் கூறாது இப்படிக் கிடப்பதுதான் அழகாகுமோ; என்னும்- தன் மனைவிபடும் துயரத்தைக் கண்டுவைத்தும் எழுந்து அவளுக்கு ஆறுதல் சொல்லாது கணவன்கிடக்கின்ற நிலை கண்டு மனம் வருந்திப் புலம்பினாள். 32 |