1647. | மொய்ம் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியாமுன்னம் விம்மா அழுவாள், ‘அரசன் மெய்யின் திரிவான் என்னில், இம் மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன்; என் சொல் பொய்ம் மாணாமற்கு, இன்றே, பொன்றாது ஒழியேன்’ என்றாள். |
மொய்ம் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் - நெருங்கிய ஆற்றல் அமைந்தவினைகளை அடியோடு போம்படி வெற்றி கொண்டு தவத்தால் உயர்ந்த வசிட்டன்; மொழியாமுன்னம் - சொல்லிய அளவில் (கைகேயி); விம்மா அழுவாள் - விம்மி அமுது; ‘அரசன் மெய்யின் திரிவான் என்னின் - சக்கரவர்த்திதான் கொடுத்தவரமாகிய சத்தியத்திலிருந்து மாறுபடுவானாயின்; இம் மாண் உளகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் -இந்தப் பெருமை பொருந்திய உலகத்தில் உயிரோடு இனிமேல் வாழ்தலை விரும்பமாட்டேன்; என்சொல் பொய்ம் மாணாமற்கு - என் வார்த்தை பொய்யாகாமைக்காக; இன்றே-இன்றைக்கே; பொன்றாது ஒழியேன் - இறந்து படாமல் இருக்க மாட்டேன்; என்றாள்-. அரசன் சொன்ன சொல் தவறினாலும், நான் சொல்லிய சொல்லிருந்து தவற மாட்டேன்,தவறினால் உயிர்துறப்பேன் என்றாள் கைகேயி. அழுவாள்- முற்றெச்சம். 42 |