1647. மொய்ம் மாண் வினை வேர் அற வென்று
     உயர்வான் மொழியாமுன்னம்
விம்மா அழுவாள், ‘அரசன்
     மெய்யின் திரிவான் என்னில்,
இம் மாண் உலகத்து உயிரோடு
     இனி வாழ்வு உகவேன்; என் சொல்
பொய்ம் மாணாமற்கு, இன்றே,
     பொன்றாது ஒழியேன்’ என்றாள்.

     மொய்ம்  மாண் வினை வேர் அற வென்று உயர்வான் -
நெருங்கிய ஆற்றல் அமைந்தவினைகளை அடியோடு போம்படி வெற்றி
கொண்டு தவத்தால் உயர்ந்த வசிட்டன்;  மொழியாமுன்னம் - சொல்லிய
அளவில் (கைகேயி);  விம்மா அழுவாள் - விம்மி அமுது;  ‘அரசன்
மெய்யின் திரிவான் என்னின் -
சக்கரவர்த்திதான் கொடுத்தவரமாகிய
சத்தியத்திலிருந்து மாறுபடுவானாயின்; இம் மாண் உளகத்து  உயிரோடு
இனி வாழ்வு உகவேன் -
இந்தப் பெருமை பொருந்திய உலகத்தில்
உயிரோடு இனிமேல் வாழ்தலை விரும்பமாட்டேன்; என்சொல் பொய்ம்
மாணாமற்கு
- என் வார்த்தை பொய்யாகாமைக்காக; இன்றே-இன்றைக்கே;
பொன்றாது ஒழியேன் - இறந்து படாமல் இருக்க மாட்டேன்; என்றாள்-.

     அரசன் சொன்ன சொல் தவறினாலும், நான் சொல்லிய சொல்லிருந்து
தவற மாட்டேன்,தவறினால் உயிர்துறப்பேன் என்றாள் கைகேயி. அழுவாள்-
முற்றெச்சம்.                                                  42