1651.தா இல் முனிவன் புகல,
     தளராநின்ற மன்னன்,
நாவில் நஞ்சம் உடைய
     நங்கை தன்னை நோக்கி,
‘பாவி! நீயே, "வெங் கான்
     படர்வாய்" என்று, என் உயிரை
ஏவினாயோ? அவனும்
     ஏகினானோ?' என்றான்.

     தா இல் முனிவன் புகல - குற்றமற்ற வசிட்டமுனிவன்இவ்வாறு
சொல்ல;  தளராநின்ற மன்னன் - வருத்தத்தால் தளர்கின்ற  சக்கரவர்த்தி;
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி - நாக்கிலே விடம்
உடைய பெண்ணாகியகைகேயியைப் பார்த்து;  ‘பாவி!  நீ என் உயிரை
வெங்கான் படர்வாய்' என்று-
பாவியாகிய நீ என் உயிராகிய இராமனைக்
கொடிய காட்டிற்குச் செல்க என்று;  ஏவினாயோ! -கட்டளையிட்டாயோ;
அவனும் ஏகினானோ?- அந்த இராமனும் காட்டிற்குச்சென்றுவிட்டானோ;'
என்றான்-.

     "நாகம் எனும் கொடியாள்தன் நாவின் வந்த சோகவிடம்"  என
முன்னும் (1505.) வந்துள்ளதை‘நாவில் நஞ்சம் உடைய நங்கை'
என்பதனுடன் ஒப்பிடுக.  ‘நீயே'  ‘ஏ' காரம் பிரிநிலை.  ‘ஓ'காரம் வினாப்
பொருட்டு.                                                   46