1653. | ‘விழிக்கும் கண் வேறு இல்லா, வெங்கான், என் கான்முளையைச் சுழிக்கும் வினையால் ஏகச் சூழ்வாய்; என்னைப் போழ்வாய்; பழிக்கும் நாணாய்; மாணாப் பாவி! இனி, என் பல? உன் கழத்தின் நாண், உன் மகற்குக் காப்பின் நாண் ஆம்' என்றான். |
‘விழிக்கும் கண் வேறு இல்லா என் கான்முளையை - விழித்துப் பார்க்கும் கண்இராமனையன்றி வேறாகப் பெற்றிராத என்னுடைய மகனாகிய இராமனை; வெங் கான் - கொடியகாட்டிற்கு; சுழிக்கும் வினையால் - சூழ்வினையால்; ஏக - போகும்படி; சூழ்வாய்! - தீய ஆலோசனை செய்தவளே; என்னைப் போழ்வாய் - என்னைப் பிளப்பவளே; பழிக்கும் நாணாய் - வருகின்ற பழிக்குச் சிறிதும் நாணமுறாதவளே; மாணாப் பாவி - மாட்சிமை இல்லாத பாவியே; இனி என் பல? - இனிப் பல பேசிப்பயன் என்ன; உன் கழுத்தின் நாண் - உன் கழுத்தில் நான் கட்டிய மங்கலக் கயிறு; உன் மகற்கு - உன் பிள்ளையாகிய பரதனுக்கு; காப்பின் நாண் ஆம்! -பட்டாபிஷேக காலத்தில் கையில் கட்டுகின்ற ரக்ஷாபந்தனமாகிய காப்புக் கயிறாக ஆகும்;' என்றான் - . "என் மகன் என்கண் என்னுயிர்" என்று முன் சொல்யது போல(1526) விழிக்கும் கண் இராமனையன்றி எனக்கு வேறில்லை என்றான் தயரதன். வரத்தைவலியுறுத்தலால் உன் கணவனாகிய யான் இறப்பேன்; அப்போது நீ அறுத்தெறிகின்ற தாலிக்கயிறு உன்மகனுக்குக் காப்புக் கயிறு ஆக உதவும் என்று கூறினான். 48 |