தயரதன் புலம்பல்  

1659.உணர்வான், அனையாள் உரையால்,
     ‘உயர்ந்தான் உரைசால் குமரன்
புணரான் நிலமே, வனமே
     போவானே ஆம்' என்னா; -
இணர் ஆர்தரு தார் அரசன் -
     இடரால் அயர்வான்; ‘வினையேன்
துணைவா! துணைவா' என்றான்;
     ‘தோன்றால், தோன்றாய்!' என்றான்.

     இணர் ஆர்தரு தார் அரசன்- பூங்கொத்துகள் பொருந்திய மாலை
அணிந்த தயரதமன்னன்; அனையாள் உரையால்- அந்தக் கோசலையின்
வார்த்தையால்; ‘உயர்ந்தான் உரைசால் குமரன் - உயர்ந்தவனாகிய புகழ்
பெற்ற இராமன்; நிலமேபுணரான் - நிலத்தை ஆள மாட்டான்; வனமே
போவானே ஆம்! -
காட்டிற்குப்போபவனே ஆவான்; என்னா - எனக்
கருதி; இடரால் அயர்வான் - துன்பத்தால் சோர்கின்றவன்; ‘வினையேன்
துணைவா!  துணைவா' என்றான் -
தீவினையேனாகிய என்னுடைய
தோழனே தோழனே என்றான்;  ‘தோன்றால்! தோன்றாய் - மகனே
என்முன் வருவாயாக;  என்றான் -.

     ‘துணைவா துணைவா' புலம்பலில் வந்த அடுக்கு.                54