1661. ‘படைமாண் அரசைப் பல கால்
     பழுவாய் மழுவால் எறிவான்,
மிடை மா வலி தான் அனையான்,
     வில்லால் அடுமா வல்லாய்!
"உடைமா மகுடம் புனை" என்று
     உரையா, உடனே கொடியேன்
சடை மா மகுடம் புனையத்
     தந்தேன்; அந்தோ!" என்றான்.

     படைமாண் அரசை - சேனைகளினது மாட்சிமையுடைய அரசர்களை;
பல கால் -இருபத்தொரு தலைமுறை;  பழுவாய் மழுவால் - பழுக்கக்
காய்ச்சிக் கூர்மையாக்கப்பட்டமழுப்படையால்;  எறிவான் - வெட்டி
அழித்தவனும்;  மிடை  மா வலி தான் அனையான் -செருக்கிய மிக்க
பலத்தில் தன்னைத் தானே ஒத்தவனும் ஆகிய பரசுராமனை; வில்லால்
அடுமாவல்லாய்! -
வில்லாலே வெல்லும் ஆற்றல் வல்லவனே; (உன்னை)
‘உடைமா மகுடம் புனை' என்று உரையா - உன்னுடைய  பெரிய
முடியைச் சூடிக்கொள் என்று சொல்லி; உடனே-அப்பொழுதே; சடை மா
மகுடம் புனையத் தந்தேன் அந்தோ' -
சடையாகிய  பெரியமகுடத்தை
அணிந்துகொள்ளும்படி  தந்துவிட்டேனே  ஐயகோ;  என்றான்-

     ‘நிருபர்க்கு ஒரு பழிபற்றிட (1275) என்ற பரசுராமப் படலப்பாடலில்,
‘இருபத்தொரு படிகால்'  என்று  இந்நிகழ்ச்சி கூறப்பெறுதல் அறிக.
‘இருபத்தொருகால்அரசு களைகட்ட பரசுராமன், மேவரும் சாந்திமத்தீ
வரண் கருதி இருத்தி்ய செம்பொன் திருத்தகுமுடியும்' என்னும் முதலாம்
இராசேந்திரன் மெய்க்கீர்த்தியும் இதனைக் கூறும். அடுமா -அடுமாறு.   56