1667. | ‘ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து, உயர் வானிடை, நாகரினும், பொலியா நின்றார் உன்னைப் போல்வார் உளரோ? பொன்னே! வலி யார் உடையார்?' என்றான்; ‘மழுவாள் உடையான் வரவும் சலியா நிலையாய் என்றால், தவிர்வார் உளரோ' என்றான். |
‘பொன்னே! - பொன் போலச் சிறந்தவனே; ஒலிஆர் கடல்சூழ் உலகத்து -ஒலிக்கின்ற கடலாற் சூழப்பெற்ற இப்பூமியில்; உயர் வானிடை- உயர்ந்தவிண்ணுலகத்தில்; நாகரினும் - நாகலோகமாகிய பாதலத்திடத்தும்; பொலியாநின்றார் - சிறந்து நின்றவர்கள்; உன்னைப் போல்வார் உளரோ? - உன்னைஒத்தவர்கள் வேறு இருக்கின்றார்களோ?; ‘வலி உடையார் யார்' என்றான் - வலிமைஉடையவர்கள் யார் உளர் என்று சொல்லி; மழுவாள் உடையான் வரவும் - மழுப்படைஉடைய பரசுராமன் வரவும்; (அது கண்டு) சலியா நிலையாய் - (சிறிதும்) தளராத நிலை உடையவனாய் இருந்தாய்; என்றால்-; தவிர்வார் உளரோ? - (நீ ஒன்று செய்தால்)உன்னைச் செய்யாதே என்று தடுப்பார் இருக்கின்றார்களா;' என்றான்-. மிக்க வலியுடையவர்கள் தம் விருப்பம்போலச் செய்ய இயலும். அவர்களைத் தடுக்க வல்லவர்யாரும் இலர். ஆதலின், என் நிலை கருதி ‘இராமா! நீ வனம் போகாதிருப்பின் உன்னை யாரால்தடுக்க முடியும்' என்று குறிப்பால் வினாவிப் புலம்பினன் தயரதன். 62 |