1668. | ‘கேட்டே இருந்தேன் எனினும், கிளர் வான் இன்றே அடைய மாட்டேன் ஆகில் அன்றோ, வன்கண் என்கண்? மைந்தா! காட்டே உறைவாய் நீ! இக் கைகேசியையும் கண்டு, இந் நாட்டே உறைவேன் என்றால், நன்று என் நன்மை!' என்றான். |
‘மைந்தா! - இராமா!; கேட்டு இருந்தேன்எனினும் - நீ காட்டுக்குச் செல்வதைக் கேட்டுவைத்தும் இங்கிருந்தேன் ஆனாலும்; கிளர்வான்- ஒளிபடைத்தவானுலகத்தை; இன்றே அடையமாட்டேன்ஆகில் அன்றோ - இன்றைக்கே சென்று சேராமல்இருந்தால் அல்லவா; என்கண் வன்கண் - என்னிடம் கொடுமைத்தன்மை உளதாகும்;நீ காட்டே உறைவாய் - நீ வனத்தில் வசிப்பாய்;இக் கைகேசியையும் கண்டு- இந்தக் கைகேயியையும் பார்த்துக்கொண்டு; இந்நாட்டே உறைவேன் என்றால்-இந்த நாட்டிலேயே(நான்) வசிப்பேன் ஆனால்; என் நன்மை நன்று - எனதியல்புநன்றாயிருந்தது;'என்றான்- ‘இன்றே' ‘ஏ'காரம் தேற்றம். கேட்டே ஏகாரம் சிறப்பு. காட்டே, நாட்டே ஏகாரங்கள்அசை. நன்று இகழ்ச்சிக் குறிப்பு. 63 |