மன்னனைத் தேற்றி வசிட்டன் சொல்லுதல் 1671. | ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து, அரசன், ‘உயிரும் சென்றான் இன்றோடு’ என்னும் தன்மை எய்தித் தேய்ந்தான், மென் தோல் மார்பின் முனிவன். ‘வேந்தே! அயரேல்; அவனை, இன்று ஏகாத வண்ணம் தகைவென் உலகோடு' என்னா. |
அரசன் - தயரத மன்னன்; ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து -ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் புலம்பி; ‘உயிரும் இன்றோடு சென்றான்’ என்னும்தன்மை எய்தித் தேய்ந்தான் - உயிரும் இன்றோடு போகப் பெற்றான் என்கின்ற நிலைஅடைந்து அழிந்தான்; மேன் தோல் மார்பின் முனிவன் - மெல்லிய தோல் போர்த்திய மார்பினை உடைய வசிட்டன்; ‘வேந்தே - தசரத மன்னனே; அயரேல் -சோர்வடையாதே; அவனை - இராமனை; இன்று - இன்றைக்கு; ஏகாத வண்ணம் -காடு செல்லாதபடி; உலகோடு தகைவென்’ - நாட்டு மக்களோடு சேர்ந்து தடுப்பேன்; என்னா - என்று. தானே சென்று சொன்னால் இராமனைத் தடுத்தல் இயலாது என்பதால் ‘உலகோடு சென்றுதகைவென்’ என்றான். 66 |