1681. ‘கையும் கடனும் நெகிழக்
     கணையோடு உருள்வோற் காணா,
மெய்யும் தனுவும் மனனும்
     வெறிது ஏகிட, மேல் வீழா,
‘ஐய! நீதான் யாவன்?
     அந்தோ! அருள்க” என்று அயர,
பொய் ஒன்று அறியா மைந்தன்,
     “கேள் நீ ” என்னப் புகல்வான்.

     ‘கையும்கடனும் நெகிழ - கையும்  குடமும் நெகிழ்ந்து விலக;
கணையோடுஉருள்வோன் காணா - அம்போடு தரையில் உருளுகின்ற
முனிமகனைக் கண்டு;  மெய்யும் தனுவும்மனனும் வெறிது ஏகிட- (என்)
உடலும் வில்லும் மனமும் வெறுமையாகிச் செல்ல;  மேல்வீழா- மேலே
விழுந்து;  ‘அந்தோ! - ஐயோ;  ஐய!- ஐயனே;  நீ தான்யாவன் -நீ
யார்;  அருள்க’ - சொல்வாயாக;’  என்றுஅயர - என்றுகேட்டுச்
சோர்வடைய;  பொய் ஒன்று அறியா மைந்தன் -
சத்தியவாக்கினன்
ஆகிய அம் முனி மகன்; ‘நீ கேள்ழு எனப் புகல்வான்-நீஇதனைக்
கேள் என்று தன் வரலாற்றைச் சொல்வானாயினன்.’

     தான் செய்த தவறால் உள்ளீடற்று மனமும் உடலும் வெறுமையானது
என்றானாம்.  வில் கீழேவிழுந்து விட்டதாகலின் வெறுமையானது. கடம் -
கடன் போலி;  மனன் - மனம்; இதுவும் போலி.                     76