1683. | ‘ “உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு, ஒரு நீ, தண்ணீர் கொடு போய் அளித்து, என் சாவும் உரைத்து, உம் புதல்வன் விண்மீது அடைவான் தொழுதான்’ எனவும், அவர்பால் விளம்பு” என்று, எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட, ஏகினனால். |
‘நீர் உண் வேட்கை மிகவே - நீர் உண்ணுகின்ற விருப்பம் மிகுதலால்; உயங்கும் எந்தைக்கு - வருந்துகின்ற என் தந்தைக்கு; ஒரு நீ - ஒப்பற்ற நீ; தண்ணீர் கொடுபோய் அளித்து - குளிர்ந்த நீரைக் கொண்டுபோய்க் கொடுத்து; என் சாவும் உரைத்து - என் இறப்பையும் அவர்களுக்குத் தெரிவித்து; ‘உம் புதல்வன்விண்மீது அடைவான் தொழுவான்ழு எனவும் விளம்பு - உம் மகன் இறந்து சுவர்க்கம் செல்கின்றவன் உம்மை வணங்கினான் என்கின்ற செய்தியையும் அறிவிப்பாயாக; என்று -எனச் சொல்லி; எண் நீர்மையினான் - புகழத்தக்க நற்குண நற் செயல்களால்; விண்ணோர் எதிர்கொண்டிட - தேவர்கள் வரவேற்க; ஏகினன் -(பரலோகத்திற்குச்) சென்றான். ‘எந்தை’ எனவே தாயும் அடங்கியது. ‘அவர்ழு என்று பின்வரும் பன்மையும் - ‘உம்’ என்ற முன்னிலையும் அதுபற்றி வந்தனவே. செய்த குற்றத்தை நினைத்துக்கசிந்துருகித் துடிக்கும் மனம் உடையவனாயினமை பற்றித் தயரதனை ‘ஒரு நீ’ என்றான் முனிகுமரன்.‘ஆல்ழு அசை. 78 |